31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

“உயிருடன் தான் இருக்கிறேன்” – வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பூனம் பாண்டே!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே நேற்று இறந்துவிட்டார் என செய்தி வெளியானது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், தான் உயிருடன் இருப்பதாக இன்று அவரே வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானவர் பூனம் பாண்டே (32). மாடலாகவும் நடிகையாகவும் பாலிவுட் திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே, திரைப்படங்களைத் தாண்டி கங்கனா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான ‘லாக் அப்’ மூலம் பிரபலமானார். 

இதனிடையே நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதள மேலாளர் நேற்று (பிப். 03) பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்பதிவு பூனம் பாண்டேவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இப்பதிவின் உண்மை நிலை குறித்தும் ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் அவரின் இறப்பை வட இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. ஊடகத்திடம் பேசிய பூனம் பாண்டே மேலாளர், ”புற்றுநோய் இருந்தது உண்மைதான். உ.பி.யில் பூனம் பாண்டேவின் சொந்த ஊரில் இறுதிசடங்குகள் நடக்கும்” என்று தெரிவித்தார்.இந்த நிலையில்தான் நடிகை பூனம் பாண்டே, தான் இறக்கவில்லை என்று பகீர் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“நான் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய தவறுதான். ஆனால், அதன் நோக்கம் என்ன? இந்த செய்தியை கேட்டதும் பலரும் கருப்பை வாய் புற்றுநோய் பற்றி பேசினோம் இல்லையா? இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் நோக்கம். மற்ற புற்றுநோய் போல இது உங்களின் உயிரை அவ்வளவு சீக்கிரம் எடுத்துவிடாது. இதனை சரியான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். அதனால், இதுபற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார் பூனம்.

இவர் பேச வந்த விஷயம் நல்லதுதான் என்றாலும், அதை இப்படியா சொல்ல வேண்டும் என்றும், இதுபோன்ற பப்ளிசிட்டி ஆபத்து என்றும் ரசிகர்கள் அவரைத் திட்டி வருகின்றனர். அவர் இறந்துவிட்டார் என்று நேற்று செய்தி வெளியானாலும் அவர் இறக்கவில்லை என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் கிளப்பினர். ஏனெனில், அவரது தங்கை ஷ்ரதா பாண்டே, குடும்ப உறுப்பினர்கள், மேனேஜர் என யாரையுமே மேலதிக தகவல்களுக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை.

மேலும், பூனம் இறந்து விட்டார் என்றால் அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விவரங்கள் எதுவும் ஏன் தெளிவுப்படுத்தப் படவில்லை என்ற கேள்வியும் இணையத்தில் எழுப்பப்பட்டது. இதுபோன்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பூனம் பாண்டே ஒரே வீடியோவில் பதில் கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading