காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எகிப்து நாடு குறிப்பிட்ட அளவுக்கு உணவு, மருந்துகள் போன்ற மனிதநேய உதவிகளை செய்ய அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் மேலும் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலில் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வாறு போர் உக்கிரமடைந்துள்ள சூழலில் இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் நேதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று தெரிவித்த அவர், காஸா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ரூ.832 கோடி நிதியுதவி வழங்கும் என்றும் ஜோ பைடன் கூறினார்.
காஸாவில் வாழ்க்கை சூழல் மோசமடைந்துள்ள நிலையில் அங்கு உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற மனிதாபிமான உதவிகளை எகிப்து நாடு வழங்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டுமழையில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 80-க்கும் அதிகமானோர் பலியானதாக காஸா உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் : ‘லியோ’வால் விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் – விதவிதமாய் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!
13 நாட்களாக தொடரும் போரில் காஸாவில் பொதுமக்கள் சுமார் 4 ஆயிரம் பேர் பலியானதாகவும், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.