தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில்…

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்கு வதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக நிலவியதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் கன மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் மிக கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி 12 மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர் கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கல்வித் துறை அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.