நாட்டை விட்டு வெளியேறத் தயார் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
இந்திய அளவில் சினிமா நட்சத்திரங்களிடையே இந்தி மொழி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விவாதத்தில் தற்போது இயக்குநர் அமீரும் இணைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், “தமிழக மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள், நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தி பேச வேண்டும் என சொல்வது தான் பாசிசம் எனக் குறிப்பிட்ட அமீர், தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா என சுகாசினிக்கு கேள்வி எழுப்பினார். மொழி, இன வெறி இருக்கக்கூடாது, பற்று இருக்க வேண்டும். தமிழ் மக்களை தமிழ் இசையோடு வைத்தவர் இளையராஜா, ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏ.ஆர்.ரகுமானை கொண்டாடியது. சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்றதால் அவர் மும்பையில் விரட்டப்பட்டார், பாஜக சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், “தமிழ் கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் குறித்து பேசுவதில்லை, சினிமா வாய்ப்பு பறிபோகும் நிலை வரும் என அச்சம்தான் அதற்கு காரணம், தமிழ் கலைஞர்களில் உச்சத்தில் உள்ள சிலர் சுய நலத்துடன் செயல்படுகிறார்கள், எனினும் மண்ணுக்காக, மக்களுக்காக சில நடிகர்கள் போராடி வருகிறார்கள்” என்றும் கூறினார்.