ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு – சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் பனிப்பொழிவு காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், ஜெர்மனி நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

கடும் பனிப்பொழிவின்போது அந்நாட்டின் பெடர்போர்ன் நகரில் பெலிபீல்ட் அருகே மார்ஷ்பெல் – லிட்ச்னா சாலை சந்திப்பில் நேற்று வாகன விபத்து ஏற்ப்பட்டுள்ளது. அப்போது கார்கள், இருசக்கர வாகனங்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பனிப்பொழிவு, வெளிச்சமின்மை , பனிப்பொழிவால் சாலையில் வாகனங்கள் பிரேக் செயல்படாமல் வழுக்கி செல்லுதல் காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.