32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் – தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா

இந்நிலையில் அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள்  வெள்ள நீரில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணத்தால் அரசு நர்சிங் கல்லூரியில் வெள்ளநீர் முற்றிலும் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த கல்லூரியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading