18-ம் தேதி வரை கனமழை தொடரும்.. குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.  நீலகிரி,  கோவை ,  தேனி,  திண்டுக்கல்,  விருதுநகர்,  தென்காசி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய…

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். 

நீலகிரி,  கோவை ,  தேனி,  திண்டுக்கல்,  விருதுநகர்,  தென்காசி,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,  மே 18- ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திண்டுக்கல்,  தேனி,  தென்காசி,  திருநெல்வேலி (மலைப் பகுதிகள்),  குமரி, தூத்துக்குடி,  விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  வெப்பநிலை

அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை,  தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கலில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.