உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு உள் கர்நாடகம் மற்றும் வடக்கு கேரளா ஆகிய பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ உயரம் வரை வளிமண்டல சுழற்சி நீட்டித்து வருகிறது. இது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது.
கனமழை
இதன் காரணமாக டிசம்பர் 13ம் தேதியன்று அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அதன்பின் இந்திய கடற்கரையிலிருந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. வேகம் முதல் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும். தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் 12 மற்றும் 13ம் தேதிகளில் கேரளா-கர்நாடகா கடற்கரையோரம் மற்றும் கிழக்கு மத்திய அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 14 முதல் 16ம் தேதிகளில் மிக அதிகமாக காற்றின் வேகம் இருக்கும்.
மீனவர்கள் எச்சரிக்கை
14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கும், கேரளா-கர்நாடக கடற்கரையோரமாக 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும், கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலுக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







