2 நாட்களாக பெய்து வரும் கனமழை – நெல்லையில் இடிந்து விழுந்த வீடு! அதிர்ச்சி காட்சி!

திருநெல்வேலியில் 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக,  டவுண் பெரிய தெருவில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

திருநெல்வேலியில் 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக,  டவுண் பெரிய தெருவில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி டவுண், பெரிய தெருவில், உள்ள ஒரு வீடு 2 நாட்களாக பெய்த கனத்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. வீடு இடிந்து விழுந்த பதைபதைக்கும் வீடியோ…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.