மதுரையில் 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ‘வாவ் மதுரை’ என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்தனர். காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்ட நிலையில், அதிக அளவில் கூட்டம் கூடியதால் பாதுகாப்பு கருதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்த காவல்துறையினர் உத்தரவிட்டனர். மக்கள் அதிக அளவில் கூடிய நிகழ்வில் எந்தவொரு முன்னேற்பாடும் முறையாக செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.