ஹெச்.ராஜாவிற்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவையில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவைவை பாஜக எதிர்த்தது. ஆளுநரே எந்த துணைவேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது. இதில் மாநில அரசின் தலையீடும் உள்ளது என்று தெரிவித்தார்.
திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் மசோதாவை நிறைவேற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், “ஹெச்.ராஜா கேரளா ஆளுநராக வர உள்ளாரா என்பதை குறித்து எனக்கு தெரியாது, நான் தேர்வுக் குழுவில் இல்லை. இருப்பினும், ஹெச்.ராஜா ஒரு நல்ல மனிதர், அவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தால் சந்தோஷமே” என்றும் கூறினார்.அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் ஆளுநருக்கு பங்களா ஒதுக்க வேண்டுமென விசிக வலியுறுத்தியுள்ளதே என்ற கேள்விக்கு, “ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை எல்லாம் விசிகவினர் தெரிந்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.