26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: 5 பெண் மனுதாரர்களில் ஒருவர் கருணைக்கொலைக்கு ஒப்புதல் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்

ஞானவாபி மசூதி வழக்கில் ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்துவிடக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக தீர்ப்பிடப்படாமல் நிலுவையில் உள்ள இந்த வழக்கிகிற்கு சம்மந்தப்பட்ட அந்த ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவரான ராக்கி சிங் என்பவர் தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த சில நாட்களிலேயே அவர் இவ்வாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், நாளை காலை 9 மணி வரை குடியரசுத் தலைவரின் பதிலுக்கு காத்திருக்கப் போவதாகவும் அதன் பிறகு தனது சொந்த முடிவை செயல்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். சக மனுதாரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் துன்புறுத்தல் காரணமாக வழக்கில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவை எடுத்ததாக ராக்கி சிங் தனது கடித்ததில் கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

”விநாயகா, கணபதியே” என டிராக்டரை வழிமறித்த படையப்பா யானையிடம் கெஞ்சும் மக்கள் – வைரலாகும் வீடியோ!

Web Editor

மக்கள் பணியை எப்போதும்போல் செய்யவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்!

சேலத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு

G SaravanaKumar