மார்ச் மாதம் இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குரூப் 4 தேர்வுகளை உடனடியாக வெளியிட வேண்டுமென ட்விட்டர் வாயிலாக நேற்று #wewantgroup4results ஹேஷ்டேக் இந்திய அளவில் நேற்று டிரெண்ட் ஆனது, இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -4 (தொகுதி 4) அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24ம் தேதி நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14ம் தேதி அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வுகளின் கனிவான தகவலுக்காக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.