செங்கத்தில் ஒரு பாசப் போராட்டம் – தன்னை விட்டுப் பிரிந்து சென்ற எஜமானை ஒவ்வொரு பேருந்தாக தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் பெரும்பாலும் பெங்களூரு, திருப்பூர், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலைக்கு செல்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்வது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போன்று இன்று காலை கூலி வேலைக்குச் சென்ற ஒரு குடும்பத்தினர் தான் வளர்த்த நன்றியுள்ள ஜீவனான நாயை வீட்டிலேயே விட்டு விட்டு வெளியூர் சென்றுள்ளனர். ஆனால் தன் எஜமானர்களை பின்தொடர்ந்து வந்த அந்த நன்றியுள்ள ஜீவன், தன்னை அவர்கள் விட்டுச் சென்றது தெரியாமல் தன் எஜமானர்களை செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் பேருந்துகளில் தேடியது.
தன் எஜமானர்களை தேடி பாசப் போராட்டத்தை நடத்தி வந்த அந்த நாயின் செயலைக் கண்டு செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அனைவருமே வியந்தனர்.