32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல் முறையீடு செய்தவர்களில்
2 லட்சம் பேருக்கு வரும் 10 ஆம் தேதி ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதையடுத்து ஒவ்வொரு மாதமும் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : தமிழகத்தில் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.  தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில்,  இந்த மாதம் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்த நிலையில்,  2 லட்சம் மகளிருக்கு  இந்த மாதம் வழங்கப்படும். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. அவர்களது ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு அதில் தகுதியானவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும்.

1 கோடியே 13 லட்சம் பேருக்கு கடந்த மாத வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 10 ஆம் தேதி ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வங்கிகளில் வரவு வைக்கப்பட உள்ளது” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading