சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.6680க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ரூ.6715க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.53,440க்கு விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 91 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 91.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.







