தொடர்ந்து உயரும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,115-க்கும், சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,115-க்கும், சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது.

இதையும் படியுங்கள் : “முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும்” – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து தொடங்கியது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 7,065க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 56,520க்கு விற்பனையானது. அதன்படி, இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 7,115க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,440 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.