புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு  முறை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில்…

ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு  முறை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் பெரும்பாலும் தங்கம் விலை உயர்வையே சந்தித்து வருகிறது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41,000, ரூ.42,000, ரூ.43,000 என்ற நிலையை கடந்து இருந்தது. பிப்ரவரி 1ம் பட்ஜெட் தாக்கப்படும் என்ற நிலையில், தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதி, தங்கத்தை பலரும் இருப்பு வைக்க தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30ம் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது. நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இறக்குமதி வரி அதிகரிப்பு பற்றி அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்பனையானது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.30 உயர்ந்து ரூ77.30க்கு விற்பனை செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பால் நாட்டில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மதியம் மற்றும் மாலை என அடுத்தடுத்து ஏற்றத்துடனேயே காணப்பட்டது. இதனால், இன்று மாலை பவுன் ஒன்றுக்கு தங்கம் விலை ரூ.720 அதிகரித்து ரூ.44,040க்கு விற்பனையானது. இதேபோன்று, ஒரு கிராம் தங்கம் ரூ.5,505க்கு விற்பனையானது.

ஒரேநாளில் தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காலத்தில் 2020-ல் ஆகஸ்டு 7ம் தேதி ஒரு பவுன் ரூ.43,360 ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.