திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்த மேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயத் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட காளையர்களும் களமிறக்கப்படுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேவாலயத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது.
போட்டியினை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.
வாடிவாசல் வழியே திமிறி சீறி பாய்ந்த காளைகள் காளையர்களைக் கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டுக் கூட பார்க்க முடியாதபடி சீறி பாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்துத் தழுவினர்.
காளைகளைப் பிடித்த வீரர்களுக்கு வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கொட்டும் மழையில் ஜல்லிக்கட்டு போட்டியினை காண ஆயிரக்கணக்கான மக்கள் குடை பிடித்தவாறு போட்டியினை பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியினை காண வந்த மேலபூசாரிப்பட்டியை சேர்ந்த முருகன்(54) காயமடைந்து மேல்சிகிச்சைக்காகத் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.