சென்னை புழல் சிறையில் சிறைத்துறை போலீசாரின் தீவிர
சோதனையில், சிறைவாசிகளிடமிருந்து கஞ்சா, செல்போன்கள்,
மற்றும் சிம் கார்ட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, புழல் விசாரணை சிறையில் மணலி ஜெ ஜெ நகரைச் சேர்ந்த, அஸ்வின்
குமார் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஆர் கே நகர் காவல் நிலையத்தில் போதை
பொருள் வழக்கு சம்பந்தமாக, கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு புழல்
சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை கெல்லிசில் உள்ள
நீதிமன்றத்திற்கு ஆஜராக அழைத்துச் சென்றனர்.
பின்னர், சிறைச்சாலைக்கு மீண்டும் கொண்டு வந்த போது சிறைக்காலர்கள் சந்தேகம்
அடைந்து அவரின் செருப்பை சோதனை செய்தபோது, செருப்பில் 25 கிராம் கஞ்சா,
ஒரு செல்போன் மற்றும் சிம் கார்டு உடன் இருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்து
தொடர்ந்து சிறையில் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தியதில், ஆகாஷ், லாரன்ஸ்,
யுவராஜ், சஞ்சய் மற்றம் சேது ஆகிய ஐந்து கைதிகளிடம் 5 செல்போன்கள், சிம்கார்டு,
பேட்டரி சார்ஜர்கள் இருந்தததை பறிமுதல் செய்தனர்.சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறை கைதிகளிடையே சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி பெண்கள் சிறையில், சிறைவாசிகள் வீடியோ கால் வசதி மூலம் குடும்பத்துடன்
பேசுவதற்கு சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து சிறையில் பல்வேறு சீர்திருத்தங்களை சிறை துறை அதிகாரிகள் மேற்கொண்டாலும், சிறைவாசிகள் பல்வேறு பாதுகாப்புகளை மீறி
கஞ்சா, குட்கா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து சிறையில் சட்ட
விரோதமாக பயன்படுத்தி வருவது தொடர் கதை ஆகி வருகிறது.
கு.பாலமுருகன்