பொன்னமராவதியில் மீன்பிடித் திருவிழா; ஏராளமான கிராம மக்கள் பங்கேற்பு!

பொன்னமராவதியில் அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் இரட்டை கம்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் இரட்டை கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக…

பொன்னமராவதியில் அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் இரட்டை கம்மாயில்
மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில்
இரட்டை கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக
பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் விவசாய பாசன கண்மாயில் நீர் வற்றும் கண்மாய்களில் ஜாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்று கூடி கலந்து கொள்ளக்கூடியதே மீன்பிடித் திருவிழாவாகும்.

கடந்த ஆண்டு பெய்த மழையும் விவசாயம் போன்றே வரும் ஆண்டில்
நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் இந்த மீன்பிடித்
திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த
இரண்டு மாதங்களுக்கு மேலாக நாள்தோரும் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக
நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதியில் அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் இரட்டை கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர்.

அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு பிடித்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.