தமிழ்நாடு முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை தடுத்துள்ளதாக கூறிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் குற்றங்கள் குறித்த ‘முத்துவும் முப்பது திருடர்களும்’ என்ற விழிப்புணர்வு புத்தகத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டார். சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ரிசர்வ் வங்கியில் ஏற்கனவே இது போன்று புத்தகம் வெளியிட்டுள்ளது என்றும், அதில் சில அப்டேட் செய்து சென்னை காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளோம் என கூறினார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜம்தாரா என்ற பகுதியில் சைபர் குற்றங்களை சில குற்றவாளிகள் செய்து வருகின்றனர். ப்ளூ டார்ட் கொரியர் என்ற பெயரில் வேறு ஒரு வெப்சைட் மூலம் 8 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். போலியான வங்கி நடத்தப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றது.
இது தொடர்பான புகார் அளிக்கப்பட்டதன் பேரில் 3,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது என்றார். மேலும் 56 லட்சம் ரூபாய் freeze செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வருட காலமாக ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்ற போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல் என 9 இடங்களில் போலியான ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக இந்த வங்கி மூலம் ஏடிஎம் கார்டுகள் கொடுக்கப்பட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளராக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் நாளொன்றுக்கு 70 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.