முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப்…

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசு பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஊக்கத்தொகை வழங்கும் பணிக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநரை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.