தேச ஒற்றுமைக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய அவர், கடந்த 2 மாதங்களில் 60 யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேசத்திற்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், தேச பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் எல். முருகன கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிமுக தன்னிடம் வரும்: வி.கே.சசிகலா
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனக்கூறிய அவர், தேச ஒற்றுமைக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட பாகிஸ்தானின் யூடியூப் சேனல்களும், அவற்றின் சமூக வலைத்தள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.