அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியான நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அதன் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகன்கள் மற்றும் ஓட்டுனரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுவாமிநாதன், விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினருக்கு தொந்தரவு செய்ய கூடாது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமென்றாலும் தேடி கொள்ளுங்கள். தேவைப்பட்டால் முறைப்படி சம்மன் அனுப்புங்கள். அதன்பின்பு குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.