முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம்; பெசண்ட் நகரில் மாரத்தான்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெசண்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெசண்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெசண்ட் நகரில் தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/news7tamil/status/1556087435788165120

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் ஓட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக மெய் நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான மாரத்தான் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், 42.2 கி.மீ, 21.1 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என 4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

அண்மைச் செய்தி: ‘‘இது ஒரு வாழ்வா? சாவா? போராட்டம்’ – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி’

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கான ரொக்க பரிசுகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்குகிறார். மாரத்தான் ஓட்டத்தின் பரிவுத்தொகையாகப் பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம், முதலமைச்சர் ஒப்படைக்கிறார்.

42 கி.மீ மாரத்தானை அமைச்சர் மெய்ய நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அமைச்சர் எ.வ.வேலு 21.1 கி.மீ மாரத்தான் பிரிவை தொடங்கி வைத்தார். அமைச்சர் கே.என்.நேரு 10 கி.மீ மாரத்தான் பிரிவை தொடங்கி வைத்தார். ஒட்டுமொத்தமாக 43,210 நபர்கள் மாரத்தானில் ஓடுவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். இதில், 32,346 ஆண்களும் 10,995 பெண்களும் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.