கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து பயனில்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் ஜாமினில் இன்று வெளியே வந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியினருடன் வரவேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து பயனில்லை. சிபிஐ விசாரணை வேண்டும். தாயின் நியாயமான வேதனை உணர்வு கேள்விக்கு பதில் ஆளும் அரசால் சொல்ல முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்ட ஒழுங்கு பாழாய் போகும். கலவரத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.
நிதிஅமைச்சர் மக்கள் உணர்வை பிரதிபலிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். வருமானம் வந்தால் போதும் என்ற வகையில் இருந்தால் மக்கள் நலன் காக்கும் அரசாக இது அமையாது. விடியா அரசு ரெட்டை வேஷம் போடுகிறது. கார்ப்பரேட்டில் இருந்து வந்த நிதி அமைச்சருக்கு மக்கள் நலன் தெரியாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் தான் அதிமுக. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கணக்கு வழக்குகளை அவரே கையாள்வார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக மக்களுக்கு சுமையை சுமத்துகிறது. மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு செய்யவில்லை. மின் கட்டணத்தை ஏற்றி உள்ளார்கள். வருகிற25ம் தேதி மின்கட்டணம் சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும், மக்கள் முட்டாள்கள் இல்லை புத்திசாலிகள். அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக திறமையின்மை, நிதி மேலாண்மை இல்லாததால், மக்கள் மீது திமுக அரசு சுமையை திணிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.