நரிக்குறவர் இன மக்களை தரையில் அமர வைத்து உணவு அளித்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு அன்னதான நிகழ்வின்போது நரிக்குறவ மக்களுக்கு உணவு அளிக்க மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று நரிக்குறவ இன மக்களுடன் இணைந்து அன்னதானம் சாப்பிட்டார்.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது, சிலரை மட்டும் மேசையில் அமரவைத்து உணவளித்துள்ளனர். நரிக்குறவர் இன மக்கள் மற்றும் சிலரை தரையில் அமர வைத்து உணவு அளித்துள்ளனர். இச்சம்பவம் தெரியவந்ததை அடுத்து, இதற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் கோயில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி மற்றும் சமையல் பணியாளர் குமாரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.