ககன்யான் திட்டத்தின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றி!

ககன்யான் திட்டத்திற்கான முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம் ககன்யான்  திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது. ஆகவே  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று ககன்யான் திட்டத்தின் முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்திறனை சோதிக்க நடத்தப்பட்ட “ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை” வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நடந்த  இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, DRDO மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இணைந்து பங்காற்றின.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.