தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு விற்பனை தற்போது தமிழகத்தில் களைகட்டியுள்ளது. சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசுகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. இருந்தபோதிலும், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்த்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரம் குறைந்து காணப்படுவதால் அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.