சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரு பட்டாசு தயாரிப்பு அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் தங்கவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்களின் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்த இரண்டு பட்டாசு தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
— அனகா காளமேகன்