மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்!

மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் இங்குதான் நடைபெறும். தமிழக அரசின் வருவாயிலும்…

மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்து பதிவுகளும் இங்குதான் நடைபெறும். தமிழக அரசின் வருவாயிலும் பதிவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத் துறை தலைவருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்,  “துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி (14-04-2021), ஆடிப்பெருக்கு (03-08-2021), தைப்பூசம் (18-01-2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்துப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்குத் தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என பரிந்துரை வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களைச் செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.