ஒசூர் பகுதியில் சாகுபடி செய்த மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலையில் விவசாயிகள் கொட்டிய பூக்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சீசனுக்கு தகுந்து பசுமை குடியல் மற்றும் திறந்தவெளியில் பூக்கள் சாகுபடி செய்து அதனை ஓசூர் மலர்சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : செங்கல்பட்டில் A+ ரவுடி மீது துப்பாக்கி சூடு!
அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜையையொட்டி சாமந்தி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா ஆகிய பூக்களை ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்தனர். மேலும் பருவ நிலை மாற்றத்தால் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை கடுமையாக குறைந்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்கள் தோட்டங்களிலியே அழித்தும், சாலையோரங்களில் கொட்டியும் செல்கின்றனர். இந்நிலையில் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்ட சாமந்தி, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா ஆகிய பூக்கள் தற்போது சந்தையில் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். அறுவடை செய்த மலர்களுக்கு அறுவடை மற்றும் போக்குவரத்து செலவிற்கு கூட விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவில்லை. இதனால் தேன்கோட்டை அருகே இஸ்லாம்பூர் பகுதியில் சாமந்தி மற்றும் பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா போன்ற சுமார் 1 டன் பூக்களை சாலையோரத்தில் கொட்டி சென்றனர். இந்த பூக்களை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கவர்களில் அள்ளி சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!