சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2. லட்சத்து 50- ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை துவங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ல் மாற்றம் செய்ய வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 100- க்கும்
மேற்பட்ட பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் முதல் நாள் இரவிலும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.
ரூபி