சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக உழவர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லல் அருகே வேப்பங்குளத்தில் “விவசாயிகளின் நலன் காக்க அரசு” திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, நுகர்வோர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பெரிய இடைவெளி இருந்து வரும் நிலையில்.
நேரடியாக விவசாயிகளும், நுகர்வோர்களும் சந்தித்து கொள்ளும் மையமாக இது செயல்பட்டு வருகிறது. இதனால், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விளைபொருட்களுக்கு உரிய விலையும், லாபமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








