அரசியல் கொலைகளை நிறுத்த யார் காலிலும் விழ தயாராக இருப்பதாக நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளரான இவர், கடந்த 18 ஆம் தேதி மாலை மன்னன்சேரி சந்திப்பில் ஐந்து பேர் கொண்ட கும்பலால், வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் உடலில் 40 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மறுநாள் ஒரு கும்பல், பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை அவர் வீட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலை சம்பவங்கள் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் சிலர் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு சென்ற நடிகரும் பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி , அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கொலைகளை முடிவுக்கு கொண்டு வர, யாரில் காலில் விழவும், தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மத ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நடக்கும் ஒவ்வொரு கொலையும் பிராந் தியத்தின் அமைதியை சீர் குலைக்கிறது என்ற சுரேஷ் கோபி, இந்த கொலைகளைப் பார்க் கும் குழந்தைகள் எதிர்மறை கலாசாரத்துக்கு மாற வாய்ப்பிருப்பதாகவும் கவலைத் தெரிவித்தார்.