பிரபல இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான கே.ஜி.ஜார்ஜ்(78) உடல்நலக்குறைவால் காலமானார்.
கேரள திரைத்துறையின் பிரபல இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் கே.ஜி.ஜார்ஜ். ‘நெல்’ படத்தின் திரைக்கதை எழுத்தாளராக சினிமாவுக்கு அறிமுகமான கே.ஜி.ஜார்ஜ், ‘ஸ்வப்நாடனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இவர் இயக்கிய ’ஸ்வப்நாடனம்’ திரைப்படத்திற்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதும், ‘யவனிகா’ திரைப்படத்திற்கு மாநில விருதும் கிடைத்தது. பலமுறை மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றார். நாற்பது வருட திரை வாழ்க்கையில் 15-க்கும் மேற்பட்ட படங்களை கே.ஜி.ஜார்ஜ் இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத்தொகை திட்டம் – பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!
நீண்ட நாட்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கே.ஜி.ஜார்ஜ், எர்ணாகுளம் அருகே உள்ள காக்கநாடு முதியோர் மையத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







