34.5 C
Chennai
June 17, 2024
தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17ம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கியது. ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மலர்க் கண்காட்சியில் ஆந்தோரியம், பேன்சி, டைந்தேஷ், ஜெர்பரா, கிங் ஆஸ்டர், மேரி கோல்டு, கல்ரோஜா, லில்லியம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வண்ண மலர்களும், மலைப் பகுதிகளில் விளையக் கூடிய வாழை, பலா, ஆரஞ்சு, காய்கறிகளான பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, கேரட் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள் : “டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை” – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

இந்நிலையில் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமான நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்த பார்வையாளர் நேரம், தற்போது காலை 7 மணி முதல் மாலை 7 மணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவுக்காக மூன்று மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் முதல் முறையாக 10 நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading