உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் படுக்கைகளில் நாய்கள் படுத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் படுக்கைகளில் நாய்கள் படுத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் படுக்கை அறையில் நாய் ஒன்று படுத்திருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவதை தொடர்ந்து நாய் மருத்துவமனையில் நுழைந்தது தொடர்பாக நிர்வாகம் விசாரானையை தொடங்கியுள்ளது.







