இபிஎஸ் பற்றி பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவிற்கு கூட, ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லை? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அருமை பற்றி பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவிற்கு கூட, ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லை? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கேள்வியெழுப்பியுள்ளார். மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அருமை பற்றி பிரதமர் மோடிக்கு தெரிந்த அளவிற்கு கூட, ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லை? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக சார்பில் நடைபெறவுள்ள பொன் விழா மாநாட்டுக்காக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். பணிசெய்து வருகின்றனர். இந்த நிலையில், மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்க்ஷா பேரணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பேரணியில் கலந்துகொண்டவர்களுடன் சேர்ந்து சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி அதிமுக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறியதாவது;

“ஓ.பி.எஸ்., குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல. இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது ஜெயலலிதா குறிப்பிட்டது. அதிமுக என்ற கோயிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம், கோயிலுக்குள் இருந்து வெளியே வந்து விட்டால் அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம்.

கோடநாடு வழக்கை தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது திமுகவினர் தான் என்பது அப்போதே தெரியவந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கோடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும் இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால்
அவரது நோக்கம் என்ன..?

பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ் இருக்கிறார் என அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், “Just like” அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை..?

காவல்துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது”.

இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.