ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி நடு வழியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கீழே குதித்தால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்க்கொடு நோக்கி கனரக லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.அப்போது
எதிர்பாராதவிதமாக திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் லாரியின் டீசல் டேங்க் தீப்பற்றி எரிய தொடங்கியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பலத்த சத்தத்துடன் டயர் வெடித்ததால் அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர்.
லாரி தீப்பற்றி எரிவதை அறிந்து லாரியின் உள்ளிருந்த உரிமையாளர்
ராமசந்திர நாயுடு (57) மற்றும் டிரைவர் சரவணன் ஆகியோர் லாரியில் இருந்து கீழே குதித்தனர். மேலும் லாரியின் பின்னால் வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது டீசல் பட்டதில் இரு சக்கர வாகனமும் பற்றி எரிய தொடங்கியது.இதில் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த நரசிம்மா மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் விரைந்து பற்றி எரிந்த லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
—–வேந்தன்