முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிங்கப்பூர், நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுடன் பேச இருப்பதாக அமைச்சர் தகவல்

சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளனர். இந்த தகவலை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடுத்தியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல், முதலமைச்சரை OLA electric Mobility நிறுவனத்தினர் சந்தித்து பேசிய நிலையில், கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில், அமைந்துள்ள மின் வாகன உற்பத்தி மையம், இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு ஆண்டுக்கு 1 கோடி மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கண்களில் கருப்புத்துணி கட்டி, சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Arivazhagan Chinnasamy

பிரதமருடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இன்று தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Halley Karthik

இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவு செய்யும் -அமைச்சர் ரகுபதி

EZHILARASAN D