மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடி உயர்ந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடி உயர்ந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது வரை, சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுக்கு அறிவிக்கவில்லை. தற்போதைக்கு மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ரூ.1000 கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறினார்.

மேலும், இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டள்ளத. பொங்கலுக்குள் 50 ஆயிரத்தை எட்டிவிடும். மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களை மின் நுகர்வோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதுவரை 1.20 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டியுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியால், மாதம் தோறும் மின் கட்டணம் அளவிடும் முறை நடைமுறைக்கு வருவதில் தாமதமாகிறது. எனவே, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோ என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.