ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது மனவேதனையை ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோருக்கான மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுதுவது குறித்து முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார்.
கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம் மனரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யும்போது டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கல்வி வழங்குவதை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.