முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகாரளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருவதாக கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவு மாணவர்கள், தற்போது அரசு பள்ளிகளில் சேர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, நேரடியாக யாரும் புகார் தெரிவிப்பதில்லை என்றும், அவ்வாறு பெற்றோர் தைரியத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகு, மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும், என அமைச்சர் அன்பில் மகேஸ் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையை தன்வசப்படுத்திய திமுக

G SaravanaKumar

’ஆட்டோ நிறுத்த அனுமதிக்கவில்லை’…செல்போன் டவர் மீது ஏறிய ஓட்டுநர்

G SaravanaKumar

அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.25 லட்சத்தில் இறகுபந்து விளையாட்டு அரங்க கட்டுமானத்திற்கு பூமிபூஜை!

Web Editor