ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் அந்த மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணிகள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதேபோல வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பூத் கமிட்டியில் அனைத்து அணியைச் சார்ந்த நிர்வாகிகளை உள்ளடக்கி அமைக்க வேண்டும் என ஈபிஎஸ் கடந்த கூட்டதில் வலியுறுத்தி இருந்த நிலையில் அந்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான இலச்சினையை ( LOGO ) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் இந்த மாநாட்டிற்கு ” வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு “ என பெயரிடப்பட்டுள்ளது.