ஹவாய் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிட்டர் அளவுகோளில் 6.2 ஆக இது பதிவாகி உள்ளது.
ஹாவாய் தீவுகளில் அவ்வப்போது நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஹவாய் தீவில் உள்ள நாலிஹூ பகுதியின் தென்கிழக்கே 27 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பாதிவானது. நிலநடுக்கத்தைத்தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக ஹவாய் அவசர கால மீட்பு படை அதிகாரிகள் கூறுகையில்‘இதுவரை பசிபிக் சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தில் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து பார்த்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து சூழலை கண்காணித்து வருகின்றனர்’எனக் கூறினார்.
ஹவாய் தீவு முழுவதிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.