நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த உள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே சார்பு அணிகளுடன் ஆலோசனை நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வரும் 28ஆம் தேதி தேனி மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி டிசம்பர் 24-ம் தேதி அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுகுறித்து கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரின் 35-வது நினைவு நாள், வரும் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது எனவும், அன்றைய தினம் காலை 11 மணிக்கு மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மரியாதை செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.