முக்கியச் செய்திகள் குற்றம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நாகை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகன் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி. இவர் கடந்த 2015ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிபாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நாகை போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலியல் துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டது உறுதிப்படுத்தினார். மேலும், அந்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் பரப்புரையில் திமுக-நாதக இடையே மோதல் : நாதக நிர்வாகியின் மண்டை உடைப்பு

Web Editor

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – தியாகராய நகர் கள நிலவரம்

G SaravanaKumar

10 புதிய ஆவின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் நாசர்

Web Editor