கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் திருக்கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு  மாநில அளவில் நடத்தப்பட்ட மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி.…

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் திருக்கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு  மாநில அளவில் நடத்தப்பட்ட மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன்  திருவிழாவை  முன்னிட்டு மாநில அளவில் 13-வது ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.  பெரியமாடு, நடு மாடு, சின்ன மாடு என 3- பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஜி. தும்மலப்பட்டியில் இருந்து வத்தலகுண்டு புறவழிச்சாலை 10-கி.மீ., போட்டியின் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் வத்தலகுண்டை சுற்றியுள்ள தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் முதலில் வரும் 3 மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் மூன்று இடங்களைப்பெற்ற 9 மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு கேடயமும், 3 பிரிவுகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தவர்களூக்கு முறையே ரூ.25001 , 20001, மற்றும் ரூ.7001- என ரொக்கப் பரிசுமும் வழங்கப்பட்டன.
மேலும், பீரோ, கட்டில், சேர் மற்றும் சைக்கிள் உள்ளிட்டவை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில், கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், நாட்டாண்மைகள் என பலரும் கலந்து கொண்டு    பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.
—–சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.